தத்துவம்

அண்மையில் இரு வேறு ஏடுகளில் படித்த - கடவுளின் இருத்தலைப் பற்றிய இரு வேறு விதமான ; சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறு கதைகள் இவை. படித்து முடித்ததும் சிலருக்கு கடவுள் உண்டா அல்லது இல்லையா என்ற குழப்பம் மேலும் வலுப்பெறும் , சிலருக்கு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற தெளிவு பிறக்கும்.
நீண்ட காலமாக கடவுள் தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு தத்துவ அறிஞரின் முன்னாள் , ஒரு நாள் திடீரென்று கடவுள் தோன்றுகிறார். தத்துவ அறிஞர் கடவுளைப் பார்த்து நீங்கள் யார் என கேட்க "நான்தானப்பா கடவுள் " என்று கடவுள் பதில் உரைக்கின்றார். அதற்கு தத்துவ அறிஞர் "கடவுள் என்றால்?" எனக் கேட்க ; கடவுள் "நான்தான் இந்த உலகை படைத்தேன் , நான் தான் இந்த உலகில் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றை முடிவு செய்கின்றேன் " என்று கூறுகின்றார். தத்துவ அறிஞரோ கடவுளைப் பார்த்து " நீங்கள் சொல்வதால் மட்டுமே ஒரு செயல் நல்ல செயல் அல்லது தீய செயல் என்று ஆகின்றதா ; அல்லது ஒரு செயல் நல்லதாகவோ , தீயதாகவோ இருப்பதால் நீங்கள் அதை வழி மொழிகின்றீர்கள ?" எனக் கேட்கின்றார். கடவுளோ " நான் சொல்வதால் தான் ஒரு செயல் நல்லதாகவோ அல்லது தீயதாகவோ நிலை நிறுத்தப்படுகின்றது" என்று பதில் கூறுகின்றார். " அப்படியானால் பிறந்த ஒரு குழந்தையை சுவற்றில் அடித்துக் கொல்லுவது ஒன்றும் தீய செயல் அல்ல என்று நீங்கள் கூறினால் அந்த செயல் தீமை ஆகாதா " என்று கடவுளைப் பார்த்து கேட்கின்றார். கடவுள் திகைத்து நிற்கின்றார். அறிஞர் தொடர்ந்து " ............. இல்லை அல்லவா , உறுதியாக நீங்கள் அந்த செயல் நல்ல செயல் என்று கூற மாட்டீர்கள், ஆக எங்களுக்கு தெரிந்த ஒன்றை கூறுவதற்கு நீங்கள் எங்களுக்கு தேவையில்லை " என்று கூறவே "எப்படியும் போய்த் தொலையுங்கள் என்று கூறிவிட்டு கடவுள் (என்று சொல்லிக்கொள்பவர் ) மறைகின்றார்.
.......... கிரேக்கத் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூறிய உவமைக் கதை ( கதை --- இதற்கு மிகச் சரியான தமிழ் வார்த்தை இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் )
கதை - 2
---------
" அறிவியலில் நாங்கள் நிறைய இலக்குகளை கடந்து விட்டோம் , இனிமேல் எங்களால் செயற்கையாக இந்த உலகினில் உயிர்களை ஆக்கவோ அழிக்கவோ இயலும்" என்று இறுமாப்புடன் பேசிக்கொண்டு இருந்த ஒரு அறிவியல் அறிஞர் முன்னால் கடவுள் வந்து நின்றார். அவரை அறியாத அறிவியல் அறிஞரோ " உனக்கு என்ன வேண்டுமோ கேள் , நொடியில் என்னால் உண்டாக்கித் தர இயலும்" எனக் கூறுகின்றார். அதற்கு கடவுள் " களிமண்ணால் ஆனா ஒரு பாவையைச் செய்து அதற்கு உயிர் ஊட்ட வேண்டும் " என்று கேட்கின்றார். உடனே அறிவியல் அறிஞர் விரைந்து கீழே குனிந்து மண்ணை எடுக்க முயல ;
கடவுள் கூறுகின்றார் " அப்பா இந்த மண் நான் படைத்தது ".
மேலே உள்ள இரண்டு கதைகளும் கூற வருகின்ற கருத்து நமக்கு விளங்கிக்கொள்ள இயலுமானால் (!!!!!!!????????) கடவுளின் இருத்தலைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.
அன்புடன்
குமார்.
Comments
- I dont understand this. Do you think God decides what we do[good or bad]?